Showing posts with label Periyava. Show all posts
Showing posts with label Periyava. Show all posts

Wednesday, 10 August 2016

Periyava experiences..


Om Namo Bhagavathey Kamakoti Chandrashekaraya..

Om Namo Bhagavathey Kamakoti Chandrashekaraya..

Om Namo Bhagavathey Kamakoti Chandrashekaraya..




Thursday, 7 July 2016

Rationalism, creationalism, evolutionalism, Tharkavaadam..


http://www.kamakoti.org/tamil/Kural110N1.htm

புத்தி ஆராய்ச்சியே செய்யாமல் பகவானையும் சாஸ்திரங்களையும் பூர்ணமாக நம்பிக் கொண்டு இருந்துவிட்டால் அது ரொம்பவும் சிலாக்யம்தான். ஆனால் இப்படிப் பூர்ணமாக நம்பிக் கொண்டு அதிலேயே ஈடுபட்டு ஆத்மாவைக் கடைத்தேற்றிக்கொள்ள நம்மால் முடிகிறதா? அப்படி முடியாத நிலையில் தெய்வ பரமான சிந்தனையோ, ஆத்மாவைப் பற்றிய நினைப்போ இல்லாமல், அதே சமயத்தில் எந்த விதமான அறிவு விசாரணையும் செய்யாமல் வெறுமே தின்று கொண்டும், தூங்கிக் கொண்டும் சோம்பேறியாக இருப்பதைவிட, புத்தியைக் கொண்டு ஆராய்ந்து, "ஈச்வரன் இல்லை; நாஸ்திகம்தான் சரியானது" என்ற முடிவுக்கு வந்தால்கூடத் தேவலை என்பேன். ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள ஒரு முயற்சியும் பண்ணாத சோம்பேறியைவிட, தன் மூளையைச் செலவழித்து ஏதோ பரிசிரமப் பட்டு ஒருத்தன் நாஸ்திகமான முடிவுக்கு வந்திருக்கிறான் என்றால், இந்தச் சோம்பேறியைவிட அந்த நாஸ்திகன் உயர்ந்தவன் என்பேன். அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித் தெளிவு ( clarity ) பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டுவிடவும் வழி பிறக்கும். ஆனால் இந்த சோம்பேறிக்குத்தான் ஒரு வழியும் இல்லை!

இதனால்தான் 'சார்வாகம்' என்கிற நாஸ்திக ஸித்தாந்தத்தையும் ஒரு மதமாக ஆதியில் வைத்தார்கள். சாரு+வாகம் என்பதே சார்வாகம். அதாவது கேட்பதற்கு நன்றாக இருக்கிற வாக்கு என்று அர்த்தம். "சாமி, பூதம் என்றெல்லாம் அலட்டிக் கொண்டு விரதம், தபஸ், இந்திரிய நிக்ரஹம், மனோ நிக்ரஹம் என்று அவஸ்தைப்பட வேண்டாம். மனம் போனபடி, இந்திரியம் போகிற வழியில் ஆனந்தமாயிருப்போம்! என்று கேட்பதற்கு ரம்யமாகச் சொல்வதால் சார்வாகம் என்று அதற்குப் பேர்.
ஆனால் அப்படி நடக்கும்போது ஆனந்தத்தோடு துக்கமும் தானே வருகிறது? அது தானே அதிகம் வருகிறது? இந்த துக்க நிவிருத்திக்குத்தான் மெடீரியலிஸமாக இல்லாத மற்ற மதங்கள் வழி சொல்கின்றன.

----

http://www.kamakoti.org/tamil/Kural113.htm

"ஆரம்ப வாதமுமில்லை. பரிணாம வாதமும் இல்லை. பிரம்மம்தான் மாயா சக்தியால் இத்தனை ஸ்ருஷ்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரமாத்மக் குயவனுக்கு வேறாக ஒரு மண்ணே இல்லை. அதனால் ஆரம்பவாதம் சரிப்படாது. பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது - பால் தயிராகப் பரிணமித்த மாதிரி என்றாலும் தப்பு. அப்படிச் சொன்னால் பால் தயிரானபின் தயிர் தான் இருக்குமே தவிர பால் இருக்காது. இம்மாதிரி பரமாத்மா ஜகத்து பரிணமித்தபின் இல்லாமல் போய் விட்டார் என்றால் அது மஹா தப்பல்லவா? அதனால் பரிணாமமும் இல்லை. தான் தானாக சுத்த ஞான ஸ்வரூபமாக ஒரு பக்கம் இருந்துகொண்டே இன்னொரு பக்கம் மாயையால் ஜீவ-ஜகத்துக்களாகத் தோன்றுகிறார். இதெல்லாம் ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான், வேஷம்தான்! ஒருத்தன் ஒரு வேஷம் போட்டுக் கொள்கிறான் என்றால் அப்பொழுது அவன் அவனாக இல்லாமல் போய் விடுகிறானா என்ன? அப்படித்தான் இத்தனையும் வேஷம், கண்கட்டு வித்தை! இத்தனையாலும் பாதிக்கப்படாமல் ஸத்வஸ்து ஏகமாக அப்படியே இருந்துகொண்டேயிருக்கிறது" என்று ஒரே அடியாக அடித்துவிட்டார். இதற்கு "விவர்த்த வாதம்" என்று பெயர்.
ஒரு கயிறானது பாம்பு மாதிரித் தோன்றுவது விவர்த்தம். கயிறு என்ற உபாதான காரணத்தை வேறு ஒரு நிமித்த காரணம் பாம்பாக மாற்றவில்லை. எனவே இது ஆரம்ப வாதம் இல்லை. கயிறு பாம்பாகப் பரிணமிக்கவுமில்லை; அதாவது transform ஆகிவிடவில்லை. கயிறு கயிறாகவே தான் இருக்கிறது. ஆனால் நம் அஞ்ஞானத்தால் பாம்பு மாதிரித் தோன்றுகிறது. இப்படியே அஞ்ஞானம் அல்லது அவித்யை என்பதால் பிரம்மம் லோகமாகவும் தனித்தனி ஜீவர்களாகவும் நமக்குத் தெரிகிறது.
---

ஒரு வஸ்துவைப் பார்த்தால் அதைப்பற்றிய ஞானம் உண்டாகிறது. சில ஞானங்கள் சரியாய் இருக்கின்றன. சில தப்பாய் இருக்கின்றன. ஸ்படிகத்தைக் கற்கண்டு என்று நினைக்கிறோம். அது தப்பான ஞானம். கற்கண்டைக் கற்கண்டாக நினைப்பது சரியான ஞானம். சரியான ஞானத்தைப் ப்ரமா (prama) என்பார்கள். தப்பான ஞானத்தை ப்ரமா (bhrama) என்று சொல்லுவார்கள். ஸம்சயஞானம் என்றும் நிச்சய ஞானம் என்றும் இரண்டு விதம். இது சரியான அறிவா என்ற ஐயத்துடன் கூடியது ஸம்சயஞானம். ஐயமில்லாமல் உறுதியுடன் அறிவது நிச்சயஞானம். சில சமயங்களில் ஒன்று தப்பாக தோன்றினாலும் அப்போதைக்கு நிஜமாகத்தான் தோன்றுகிறது. அப்பொழுது இந்த ஞானம் பிரமாணம்தான் என்று தோன்றும்- ஸ்படிகக் கற்கண்டு மாதிரி. சில ஞானங்கள் தோன்றும் பொழுதே பொய்யாகத் தோன்றுகின்றன. குளத்திற்குள் தலைகீழாகத் தெரிகிற மரத்தின் பிரதி பிம்பத்தை அறியும் பொழுதே அது நிஜமல்ல, அப்ரமாணம் என்றும் தோன்றுகிறது. ஞானம் வரும் பொழுதே பிரமாணம் என்று தோன்றுவதும் அப்ரமாணம் என்று தோன்றுவதும் ஆக இரண்டு வகை. வரும் காலத்திலே இது நிஜந்தான் என்று வருகிற ஞானம் பிராமாண்ய க்ரஹ ஞானம்; தோன்றும் பொழுதே அப்ரமாணம் என்று தோன்றுவது அப்ரமாண்ய க்ரஹ ஆஸ்கந்தித ஞானம். ப்ரமை (pramai) யில் போலவே, ப்ரமை (bhramai) யிலும் பிரமாண ஞானம் உண்டு. அதனால்தான் ஸ்படிகத்தைக் கற்கண்டாக நினைக்கும்பொழுதும் நம்முடைய நினைப்பு பிரமாணமாகத் தோன்றுகிறது.
இப்படியாக ஒரு வஸ்து தோன்றும் போதே அது நிஜமானது (ப்ரமாணம்) அல்லது பொய்யானது (அப்ரமாணம்) என்றும் தோன்றுகிறதே, இந்த ப்ரமாண அப்ரமாண அறிவானது வஸ்துவைப் பார்க்கிற நம்முடைய ஞானத்திலிருந்து ( subjective -ஆக) தோன்றுகிறதா, அல்லது ( objective -ஆக) அந்த வெளி வஸ்துவிலிருந்து தோன்றுகிறதா? நம்மிலிருந்து தோன்றினால் 'ஸ்வத: ப்ரமாணம்'. நாம் அறிகிற வஸ்துவிலிருந்து தோன்றினால் 'பரத: ப்ரமாணம்'.
இந்த இரண்டில் எது சரி என்றுதான் மண்டனர் வீட்டுப் பெண் கிளிகள் வாதம் செய்தனவாம்.
நமக்கு உண்டாகும் ஞானம் பிரமாணமானது அல்லது அப்பிரமாணமானது என்று ஏற்படுகிற உறுதி நம் ஞானத்துள்ளேயே ஸப்ஜெக்டிவ்வாக இருப்பதில்லை. அது நாம் அறிகிற வஸ்துவிடமுள்ள குணத்தால் ஏற்படுவதுதான். அந்த வஸ்துவிடமிருந்து நடைமுறையில் பிரயோஜனம் அடைய முடிந்தால்தான் நம்முடைய ஞானம் சரியானது அல்லது தப்பானது என்று ஆகிறது. அதாவது நம் ஞானம் சரியா தப்பா என்பது ஆப்ஜெக்டிவ்தான் என்பதே நியாய சாஸ்திரத்தின் கருத்து. மண்டனமிச்ரர் போன்ற மீமாம்ஸர்களின் அபிப்ராயமோ இதற்கு மாறானது. நம் ஞானம் பிரமாணமானது என்கிற உறுதி நம்முடைய அறிவையே சேர்ந்த விஷயந்தான்; ஆனால் நம் ஞானம் பிரமாணமில்லை (அப்ரமாணம்) என்று தெரிவது வெளிவஸ்துவைப் பொறுத்த விஷயம்- "ப்ராமாண்யம் ஸ்வத: அப்ரமாண்யம் பரத:"- என்பது அவர்கள் கட்சி.
இந்த வாதங்களெல்லாம் தர்க்கத்தில் வரும்.
"வாதம்" என்றாலே இந்தக் காலத்தில், தான் சொன்னதே சரியென்று பிடிவாதம் பண்ணுவது என்று தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் வாதமென்பது நாமும் பேசி எதிராளியையும் பேசவிட்டு இரண்டையும் ஆலோசித்துச் சீர்தூக்கி உண்மையை அறிவதுதான். அநேக இடங்களுக்குப் போய் மண்டனமிச்ரர் போன்றவர்களிடம் ஆசாரியாள் வாதம் செய்தார் என்பது இப்படித்தான்.

http://www.kamakoti.org/tamil/Kural114.htm

---

Saturday, 25 June 2016

ஸந்தியாவந்தனம்


ஸந்தியாவந்தனம் பண்ணு என்றால், இக்காலத்தில், "செய்யமாட்டேன். அந்தப் பலன் எனக்கு வேண்டாம்" என்று சொல்லுகிறார்கள். அவர்களுக்கு மீமாம்ஸையால் ஸுலபமாகப் பதில் சொல்லிவிடலாம். ஸந்தியாவந்தனம் என்பது பலனக்காகப் பண்ணும் காம்யமான (optional) கர்மா இல்லை; அதைப் பண்ணாமற் போனால் உபத்திரவம் உண்டாகும் என்று மீமாம்ஸை சொல்கிறது!
பண்ணினால் பலன் என்பது நியாயம். பண்ணாவிட்டால் உபத்திரவம் என்பது என்ன நியாயம்? ஸந்தியாவந்தனம் பண்ணாவிட்டால் தோஷம் என்கிறார்கள். பண்ணினால் ஐச்வரியம் வரும் என்று சொல்லமாட்டார்கள். செய்யாவிட்டால் உபத்திரவம் என்னும் வகையிற் சேர்ந்தது அது.
கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம் முதலியவை பண்ணினால் விசேஷ பலன் உண்டு என்று சொல்லுகிறார்கள். அவை "கரணே அப்யுதயம்" என்னும் வகையைச் சேர்ந்தவை. இது நியாயமாகப் படுகிறது.
"அகரணே ப்ரத்யவாயம்" என்பது நியாயமா? லோகத்தில் அதற்கு திருஷ்டாந்தம் உண்டா?
உண்டு.
நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;
ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், "உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்" என்றால் அவன் விடுவானா? 'நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.' என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான். இது "அகரணே ப்ரத்யவாய ஜனக"த்தைச் சேர்ந்தது.
அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.
தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.
'கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?' என்று சிலர் கேட்கலாம்.
வேதத்தில் "தைத்திரீய ஸம்ஹிதை" (Vl-3) யில் "பிராம்மணன் பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான். ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டு" என்று சொல்லியிருக்கிறது. "வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், தர்ப்பணம் சிரார்த்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன" என்கிறது. கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும். இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.
இரண்டு ஸஹோதரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் பார்க்கிறான். மற்றவன் வைதிகன். முதல்வனுக்குக் கச்சேரி(court)க்குப் போகிற கடன் ஏற்பட்டிருக்கிறது. அவன் கச்சேரிக்குப் போகாமல், "இரண்டாமவன் போகவில்லையே; நான் மட்டும் எதற்காகப் போகவேண்டும்?" என்றால், "நீதான் மனுப்போட்டாய்; வேலை செய்யும்படி உத்தரவு போட்டோம்; நீ வருவதாக ஒப்புக் கொண்டாய். ஆகையால், நீதான் வரவேண்டும்'' என்று அதிகாரிகள் சொல்லுவார்கள். அதைப் போல நல்ல கதி வரவேண்டுமென்று நாம் முன் ஜன்மத்தில் செய்த ஸத்காரியம் என்பதான மனுப் போட்டிருக்கிறோம். அதற்கேற்றபடி கர்மாக்களைச் செய்ய வேண்டுமென்று உத்தரவாய் இந்த [நிகழ்] ஜன்மா லபித்திருக்கிறது. உத்தரவு பண்ணியவர் ஒருவர் கண்ணுக்குத் தெரியாமலே ஸர்வ ஸாஷியாக இருக்கிறார். இது வேதாந்தியின் மதம். எந்த வேலைக்காக 'மனு'ப்போட்டோமோ அதுவே நமக்குப் பலனைத் தருகிறது என்பது மீமாம்ஸகர்கள் மதம். கர்ம பலன் தானே நடக்கும் (Automatic) என்பது இவர்களுடைய மதம்.


Pramanam, gunam, diraviyam, indriyam..


ஏழு பதார்த்தங்களாவன: திரவியம், குணம், கர்மம், ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம், அபாவம் என்பவை. திரவியம், குணம், கர்மம் இந்த மூன்றும் ஸத்தான பதார்த்தம். அவற்றை இருக்கிறதென்று நம்மால் காட்ட முடியும். அதுதான் ஸத். பாக்கி நான்கும் அப்படிக் காட்ட முடியாதது. "ஸத்தை"யோடு கூடியது முதல் மூன்றுதான். இவற்றில் முதலாவதான த்ரவ்யம் ஸ்தூலமாக காட்டக் கூடியது. ஞானம், ஆசை, ஸந்தோஷம், துக்கம் முதலிய குணங்களைத் தனியாகப் பிரித்துக் காட்ட முடியாது. இவைகளெல்லாம் ஒன்றை ஆசிரயித்தே இருக்கும், தனியாகப் பிரிக்க முடியாது. தாமரை சிவப்பாக இருக்கிறது. சிவப்பு தாமரையினுடைய குணம். அந்தச் சிவப்பைத் தனியாகப் பிரித்துக் காட்ட முடியாது. இப்படி ஒரு ஆசிரயத்தை ஒட்டிக் கொண்டு இருப்பதுதான் குணம். அது எதை ஆசிரியத்திருக்கிறதோ அந்த ஆசிரியந்தான் த்ரவ்யம். சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனியாகக் காட்ட முடியாவிட்டாலும் ஒருத்தன் ஸந்தோஷமாகவும் துக்கமாகவும் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா? அப்போது ஸந்தோஷம், துக்கம் இவற்றையும் தெரிந்துகொண்டு விடுகிறோம். சிவப்புத் தாமரையைப் பார்க்கும்போது சிவப்பு என்னவென்று தெரிந்து கொண்டு விடுகிறோம். கர்மம் என்பது காரியம். சலனம், போதல், ஓடுதல் முதலிய வேலைகள் கர்மாக்கள். அவைகளும் திரவியத்தை ஆசிரயத்தே நிற்கும். ஒருவன் ஓடுகிறான், ஓடுதலை அவனிடத்திலிருந்து பிரிக்க முடியாது. அவன் ஓடுகிறான் என்பதைப் பார்க்க முடிகிறது. அப்போது அவன் உட்கார்ந்திருக்கவில்லை, படுத்திருக்கவில்லை என்ற வித்யாஸம் தெரிகிறது. அதனால் ஓட்டத்தை நாம் பார்க்கிறோம் என்று அர்த்தம். ஸாமான்யம் என்பது நாலாவது பதார்த்தம். அது ஜாதியைக் குறிப்பது. பல மாடுகள் இருக்கின்றன. அவைகளுக்குள் மாட்டுத்தன்மை என்னும் ஒரு பொதுமை இருக்கிறது. அதை நாம் ஜாதி என்கிறோம். அது எல்லாப் பசுக்களிடத்திலும் இருக்கிறது. அதுதான் "ஸாமான்யம்". ஒரே மாதிரி இருந்தும் வெவ்வேறாக இருப்பது "விசேஷம்". பசுக்கள் ஒரே ஜாதியாக இருந்தும் அப் பசுக்களிடத்தில் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்துக் காட்டக்கூடிய சில 'விசேஷ' அடையாளங்கள் இருக்கின்றன. திரிவியத்தையும் குணத்தையும், திரவியத்தையும் அதன் காரியத்தையும், தனித்தனியானவற்றையும் பொதுமையையும், ஒரு முழு வஸ்துவையும் அதன் அவயவங்களையும் பிரிக்க முடியாமல் ஒட்டி வைத்திருப்பதுதான் "ஸமவாயம்" எனப்படுகிறது. அக்னியில் பிரகாசமான ரூபம் இருக்கிறது. அந்தப் பிரகாசத்தையும் ரூபத்தையும் பிரிக்க முடியாது. அது ஸமவாயம். திரவியமும் திரவியமும் சேர்ந்தால் அதை ஸம்யோகம் என்று சொல்வார்கள். இவை ஒன்றோடொன்று சேராமல் தனித்தும் இருக்க முடியும். திரவியமும் குணமும் சேர்ந்தால் அது ஸமவாயம்; திரவியமும் கர்மாவும் சேர்ந்தால் அதுவும் ஸமவாயந்தான். குணமும் கர்மாவும் ஒரு திரவியத்தைச் சேராமல் தனித்தும் இருக்க முடியாது.
.....

இந்த ஐந்து குணங்களையும் பகவான் பஞ்ச பூதங்களில் வைத்திருக்கிறார். மண்ணில் ஐந்து குணங்களும் இருக்கின்றன. அதற்கு ரூபம் இருக்கிறது; ருசி இருக்கிறது. நம் உடம்பு, கத்திரிக்காய், வெல்லம் எல்லாம் மண்தான்! மண்ணுக்கு வாஸனை இருக்கிறது. வாஸனை உள்ள புஷ்பம் மண்தான். கடினம், சீதம் உஷ்ணம் முதலியதான ஸ்பரிசத்தால் அறியும் குணங்களும் மண்ணுக்கு இருக்கின்றன. சப்தமுங்கூட இருக்கிறது. நூலைக் கட்டிக் கேட்டால் சப்தம் கேட்கிறது. கட்டையைத் தட்டினால் சப்தம் உண்டாகிறது. ஜலத்தில் கந்தத்தைத் தவிர மிகுதியுள்ள நான்கு குணங்களும் இருக்கின்றன. நாம் வாஸனைப் பதார்த்தங்களைக் கலந்தால்தான் ஜலத்தில் கந்தம் உண்டாகிறது. ஜலத்திற்கு ரூபம், ரஸம், சப்தம், ஸ்பரிசம் என்னும் நான்கும் இருக்கின்றன. ஜலத்தை அடித்தால் சப்தம் உண்டாகிறது. மண்ணில் ஐந்து குணங்களும் இருந்தாலும் மற்ற நான்கிலும் இல்லாமல் அதில் மட்டும் இருப்பது கந்தம். அது அதனுடைய விசேஷ குணம். ஜலம் இல்லாமல் போனால் ரஸம் இல்லை. அதனால்தான் ரஸேந்திரியமாகிய நாக்கில் எப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது. நாக்கில் நீர் வற்றி மரத்துப் போனால் ருசியை அறிய முடியாது! ரஸம் என்பதற்கே ஜலம் என்று ஒரு அர்த்தம் உண்டு. தேயுவுக்கு (நெருப்புக்கு) ரஸமும் இல்லை, கந்தமும் இல்லை. ரூபம், சப்தம், ஸ்பரிசம் என்ற மூன்றுதான் இருக்கின்றன. அதற்கு ரூபம் விசேஷ குணம். வாயுவில் ரூபம் இல்லை. சப்தமும் ஸ்பரிசமும் மாத்திரம் இருக்கின்றன. அதற்கு ஸ்பரிசம் விசேஷ குணம். அதனால்தான் நம் மேலே காற்று பட்டால் தெரிகிறது. ஆகாசத்திற்கு சப்தம் மட்டுமே உண்டு. வாயுவினால்தான் சப்தம் உண்டாகிறதென்று முதலில் நவீனர்கள் கருதியிருந்தார்கள். கம்பியில்லாத் தந்தி முதலியவை ஏற்பட்ட பிறகு காற்றினுடைய மாறுதல்களுக்கு உட்படாமல் சப்தம் கேட்பதால் ஆகாசத்தினுடைய குணம் அது என்று தெரிந்து கொண்டு வருகிறார்கள்.

.....

ஒரு சின்ன அநுமானத்தை இப்பொழுது பார்க்கலாம். நான் உட்கார்ந்துள்ள இந்த ஸிம்மாஸனம் ஒருவன் பண்ணித்தான் ஆகியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். பண்ணினவனை நேரில் தெரியாததால் இது பண்ணப்பட்டது என்பதே பொய் என்று சொல்லலாமா? வேறு ஸிம்மாஸனங்களைப் பண்ணி நாம் பார்த்திருக்கிறோம். அதைக் கொண்டு இதையும் பண்ணினவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அவனுக்கு இதைப் பண்ணுகின்ற சக்தியுண்டு என்பதையும் அறிந்து கொள்ளுகிறோம். அதைப் போல ஜகத்து எல்லாவற்றையும் பண்ணுகிறவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஸர்வஜ்ஞன், ஸர்வசக்திமான். எல்லாரையும் ரக்ஷிக்கின்றமையால் கருணாநிதியாகவும் அவன் இருக்க வேண்டும். இம்மாதிரி விஷயங்களை ஆக்ஷேபணை, ஸமாதானங்களோடு ஸரியான அநுமானத்தைக் கொண்டு நிர்ணயிப்பது நியாய சாஸ்திரம்.


http://www.kamakoti.org/tamil/Kural109.htm

Thursday, 23 June 2016

அநாயாச மரணம்..


அறுபது வயதைத் தாண்டிய பக்தர்.
“எனக்கு அநாயாச மரணம் கிடைக்கணும்” என்று பெரியவாளிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.
அநாயாஸ மரணம் என்றால், நோய்வாய்ப்பட்டு, பல நாட்கள் படுக்கையில் கிடந்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் துன்பம் கொடுத்து, பின் ஒருவழியாகப் போய்ச் சேர்வது என்றில்லாமல், சட்டென்று உயிர் போய்விடுவது என்பதாகும்.
“நீங்க தினமும் பூஜை செய்து முடிக்கும்போது சொல்கிற பிரார்த்தனை சுலோகம் – “அநாயேஸேன மரணம் விநா தைன்யேன ஜீவநம்! தேஹி மே க்ருபயா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம்!!”
இதைச் சொல்லிவிட்டு த்ரயம்பக மந்திரம் சொல்லிண்டிருங்கோ..” என்றார் பெரியவாள்.
பக்தர் பிரசாதம் பெற்றுக்கொண்டு காஞ்சிபுரத்தில் அவர் தங்கியிருந்த அறைக்குப் போய் கதவைத் திறந்து, நாற்காலியில் உட்காரும் வரை பெரியவாளுடைய ஆக்ஞைப்படி நடந்து கொண்டார்.
அடுத்த விநாடி, அவர் நாற்காலியில் சாய்ந்து விட்டார். அவர் விரும்பியபடி ‘அநாயாஸமாக’ப் போய்ச் சேர்ந்துவிட்டார்.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?”

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?”



(பணிவிடைகள் செய்து கொண்டிருந்த 'பவாருக்கு' கிடைத்த பாக்கியம்)


csimg19.jpg
ஒரு மறு பதிவு.



மஹா பெரியவா மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை.பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போதுஜமீன்தாரிடம் கேட்டார். 



“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”



ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?



“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டுஇளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.



அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில். இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.



எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான், ஒவ்வருவரிடமும்“சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார். பவார் முகாமின் காவலாளியாகவெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?



“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். மடத்து நிர்வாகியை அழைத்தார்.



“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா?நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.



சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒருசிறிய தூக்கு.



விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்திற்கு உணவு கொண்டு போவதாகவும்,வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர். காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக்கொடுக்க முடியுமா?” ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.



“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கைஅங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது. புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.



தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.



அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.



பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம்செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது…. 



“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.



ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.



“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. மஹானின் “மேனா”வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான். அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.



வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.



விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால்நம்பமுடியவில்லை.



“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.



பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்குஅவர்களுடன் போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான்,என்பது உண்மை.



இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது. இடம் கிடைகாத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…



ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்கஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன்வரக்கூடாது என்று உத்தரவு.



ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார். சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகைவாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.



“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு… “எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செய்தபின் குகைக்குள் நுழைந்தார்.



என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது. சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். 



“இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.



உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக,வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.



வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். 



இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவன்.

Read more: http://periva.proboards.com/thread/12012/#ixzz4COEIAIjo

Monday, 20 June 2016

வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், ..


Jan 12, 2016 at 8:23am 
Quote 
Post Options

Post by varagooran on Jan 12, 2016 at 8:23am

"வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு "



(இன்று காலை 07-15 மணிக்கு பொதிகை டி.வி.யில் இந்திரா சௌந்தர்ராஜன் சொன்ன அற்புத நிகழ்ச்சி-முன்பு பால ஹனுமானில் வந்தது)



அஸ்மிந் பராத்மந் நநு பாத்ம கல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி

அநந்த பூமா மமரோக ராசிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ
1507603_10202994818654217_40352395530888678....jpg




பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.





ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.







ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.





நன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.





அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.





நான் இந்த ஸ்லோகத்தை எழுதி, எனக்குத் தெரிந்த யாருக்கேனும் (இப்போதுதான் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறதே) புற்றுநோய் என்று தெரிந்தால், அவர்களுக்குக் கொடுத்து, பெரியவா சொன்னதைக் கூறுகிறேன்.







மஹா பெரியவா அருள்வாக்கு : -



“நம் சரீரத்துக்கு எந்த வியாதி வந்தாலும், எந்தக் கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும், இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தைக் கொடுப்பதற்கு ஸ்வாமியினாலே கொடுக்கப்பட்டவை; இவை எல்லாம் தபஸே” என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.


Read more: http://periva.proboards.com/thread/10939/#ixzz4C6rhs5oO